டொலர் இல்லை - வரும் மாதங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்: எஸ்பிசி எச்சரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

டொலர் இல்லை - வரும் மாதங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்: எஸ்பிசி எச்சரிக்கை.

டொலர் தட்டுப்பாடு காரணமாக பல அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் சத்திர சிகிச்சை கூடங்களில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (எஸ்.பி.சி) எச்சரித் துள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், மருந்து விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 72 கடன் பத்திரங்கள் மீளச் செலுத்தப்படவில்லை எனவும் சில கடன் பத்திரங்கள் காலாவதியாகியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தங்கள் கடைகளில் இருந்த மருந்துகளின் இருப்பு ஏற்கனவே மிகவும் குறைந்த அளவில் இருந்ததையும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. அடுத்த சில மாதங்களில் கையிருப்பு தீர்ந்து போகும் அபாயத்தை தவிர்க்க முடியாது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.