நாட்டில் பலருக்கும் ஒமிக்ரான் இருக்கலாம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாட்டில் பலருக்கும் ஒமிக்ரான் இருக்கலாம்.

தற்போது நாட்டில் இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் தொற்றாளர்களை பார்க்கும்போது, நாட்டில் பலருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என்பது தெளிவாக தெரிவதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, ஒமிக்ரான் வைரஸ் தொற்றுடன் நாட்டில் மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் செயற்பாடுகளை வைத்துப்பார்க்கும்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்றுடன் பலர் நாட்டுக்குள் இருக்கக்கூடும் என்பது தெளிவாக தெரிகிறது என்றார். எனவே, அடுத்த மூன்று வாரங்களில் நாடுமுழுவதிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவி, ஒமிக்ரான் தொற்றாளர்கள் பிரதானமாக இனங்காணப்படக்கூடிய ஆபத்துக்காணப்படுகிறது எனவும் கூறினார். பிரதானமாக ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின், நாடு மோசமான நிலைமைகளை சந்திக்கும் என்பதை நினைவில்கொண்டு, பண்டிகைகளை கொண்டாட வேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.