ஜனவரி முதல் பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்படும்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
ஜனவரி முதல் பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்படும்!

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவரான மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.

 டிசம்பர் 23 ஆம் திகதியுடன் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் முடிவடைவதால் தற்போது கட்ட ணத்தை அதிகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதால், ஜனவரி 3ஆம் திகதி முதல் பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக மேலும் பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கும். டீசல் போன்றவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு முன்னர் அரசாங்கம் எப்போதும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுத்தினார். 

அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்கும் என நம்புவதாகவும், இருப்பினும் அது சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.