அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம். 


விடுவிக்க 25 மில்லியன் டொலர் தேவை. துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,000 கொள்கலன்களை விடுவிக்க குறைந்தபட்சம் 25 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.

 பண்டிகைக் காலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை இன்று (17ஆம் திகதி) வழங்காவிட்டால் அவற்றை விநியோகிக்க முடியாது என இறக்குமதி யாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு நேற்று அறிவித் துள்ளனர். 

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

 கொள்கலன்களில் அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, சீனி மற்றும் பெரிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த உணவுக் கொள்கலன்களை வெளியேற்ற டொலர்கள் கிடைக்காததால் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் என்பவை கெட்டுப்போகும் அபாயம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 இறக்குமதியாளர்களின் கோரிக்கைக்கு அமைய தேவையான டொலர்களை உடனடியாக வழங்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கியுள்ளமையால் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.