பண்டிகைக்கு முன் பூஸ்டரை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் -

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 பண்டிகைக்கு முன் பூஸ்டரை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் 


இலங்கை மருத்துவ சங்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பண்டிகைக் காலத்துக்கு முன்னதாக ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கல்லூரிகளுக்கிடையேயான குழுவுடன் இணைந்து இலங்கை மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி ,இலங்கை மருத்துவ சங்கத்தால் நேற்று (07) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் மூத்த குடிமக்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசியின் முதல் 2 டோஸ்களை பூர்த்தி செய்யாதோரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய ,முன்னணி பணியாளர்கள் பூஸ்டர் டோஸுடன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது. 

மேலும் ,எதிர்வரும் பண்டிகை மற்றும் புத்தாண்டுக் காலங்களில் கூடும் கூட்டங்களில் அதிக தொற்று ஏற்படும் அபாயம் மற்றும் கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாட்டின் சாத்தியமான பரவல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மருத்துவ சங்கம் இவற்றைப் பரிந்துரைப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.