இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இருநாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 இந்தோனேசியாவின் சுலேவெசி மாகாணத்தில் உள்ள டொபேலோ நகருக்கு அருகே, அதிகாலையில் சுமார் 174 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிச்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இத்தகவலை, இந்தோனேசியாவின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 

எனினும், இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், அருகேயுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சரங்கணி தீவுக்கு அருகே 156 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டு நிலநடுக்க கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது 6.1 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் அருகேயுளள கேட்டில் நகரில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.