பஸ்களுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதியில்லை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 பஸ்களுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதியில்லை.

பயன்படுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவர் - பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் பஸ்கள் எதிர்காலத்தில் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவ்வாறான பஸ்களின் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் இந்த பஸ்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் பெற்றோல் நிலையங் களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 பேரூந்துகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் முறையற்ற முறையில் எரிபொருளைப் பயன்படுத்து வதனால் ஏற்பட்டதே தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் தரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் அல்ல என்றும் அவர் கூறினார். 

பல சோதனைகளின் பின்னரே எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதால் தரமற்றதாக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் வலியுறுத்துகிறார்.

 பரிந்துரைக்கப்பட்ட எரிபொருளைத் தவிர மற்ற வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் ஆராய நாடளாவிய ரீதியில் மூன்று விரைவு பரிசோதனைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது மண்ணெண்ணெய் விற்பனை மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நாளாந்தம் 23 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

 கடந்த வருடத்தை விட இந்த வருடம் மண்ணெண்ணெய் தேவை 14 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுமித் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.