பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரொன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது, பயணத் தடையால் மோசமான பாதிப்புகளே உருவாகும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரொன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது, பயணத் தடையால் மோசமான பாதிப்புகளே உருவாகும்.

WHO பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரொன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது. 

அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் புதிய வைரஸ் தொற்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது. 

இதையடுத்து அதற்கு ஒமிக்ரொன் என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டது. இந்த உருமாறிய புதிய கொரோனா தொற்று பரவலை தடுக்க, உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ஒமிக்ரொன் பாதிப்புள்ள தென்னாபிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹொங்கொங், பிரிட்டன், பிரேஸில், பங்களாதேஷ் , போட்ஸ்வானா, மொரீஷியஸ், சிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் வருவோருக்கு பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரொன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்ததுள்ளது.

 மேலும் பயணத் தடைகள் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும்.

 “60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று பாதிப்பில் உள்ளவர்கள், அல்லது இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்) உள்பட்டவர்கள், பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.” எதிர்காலத்தில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம். 

ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஒமிக்ரொன்பயண ஆலோசனை அறிக்கையில் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.