பாணின் விலையை அதிகரிக்கவேண்டும் என வேண்டுகோள்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பாணின் விலையை அதிகரிக்கவேண்டும் என வேண்டுகோள்

தற்போது பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், 450 கிராம் பாணை குறைந்தபட்ச விலையாக 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் பாரியளவில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அச்சங்கத்தின் தலைவரான என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

நாட்டில் இரு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் மாத்திரமே உள்ளன, அந்த நிறுவனங்கள் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டும், அவ்வாறு செய்ய, டொலர் பிரச்சினையை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவிக் கின்றனர்.

 நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக நேற்று ஒரு கிலோகிராம் கோதுமை மா உள்ளூர் சந்தையில் 18.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக கோதுமை மாவின் விலை ரூ.8 அல்லது ரூ.10 ஆக உயர்த்தப்பட்டது.ஒரு மாதத்துக்கு முன்னர் கோதுமை மா நிறுவனங்கள் ரூ.10 விலையை உயர்த்தின. நீரை தவிர, பாண் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.