சமையல் எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சமையல் எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும்.

சமையல் எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

 சமையல் எரிவாயுவுடன் தொடர்புடையதாக தீப்பரவல் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வை நடத்துவதற்கு அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக் களம் அவதானம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. 

எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிகளுக்கு அரச பகுப்பாய்வுத் திணைக் களத்தின் விசேட குழுவினர் சென்று இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளனர்.

 அதேநேரம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரி வாயுவுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகின்றன.

 கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு மாதிரிகளை பரிசோதிக்க அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக் களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கப் பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஏழு மாவட்டங்களில் பெறப்பட்டுள்ள சமையல் எரிவாயு மாதி ரிகளும் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.