புதிய அரசமைப்பு எப்போது வரும்? இன்று வெளியான அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

புதிய அரசமைப்பு எப்போது வரும்? இன்று வெளியான அறிவிப்பு.

வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 2022 ஜனவரி மாதமே நாடாளுமன்றம் மீண்டும் கூடும்.

 அவ்வாறு கூடும்போது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

அந்த குழுவின் பணிகள் முடிவடைந்த பின்னர், சட்டமூலம் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்படும்.

 அதன்பின்னரே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இவ்வருடத்துக்குள் அப்பணிகள் நிறைவுபெறும்.

 அதன்பின்னர் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி முதல்வாரத்தில் இருந்து புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும். 

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான தினேஷ் குணவர்தன குழுவின் அறிக்கையும் ஜனவரியில் சபையில் முன்வைக்கப்படும். 

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு இதுவும் பக்கபலமாக அமையும்.”- என்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.