1938 இலக்கத்துக்கு வரும் முறைப்பாடுகள் அதிகரிப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

1938 இலக்கத்துக்கு வரும் முறைப்பாடுகள் அதிகரிப்பு

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மகளிர் உதவி மையத்தின் '1938' என்ற தொலைபேசி இலக்கத்துக்கு நாளொன்றுக்கு 400 முதல் 500 அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக மகளிர் ஆதரவு நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜெயமான்ன கூறுகிறார். 

உள்வரும் அழைப்புகளில் 50% பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை. மேலும் பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகள் குறித்து 80 முதல் 100 முறைப்பாடுகள் பெறப்படுகின்றன.

 குடும்பங்களில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் ஆண்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது போன்ற காரணங்களால் இது போன்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 தொற்று நோய் காரணமாக போக்குவரத்து தடைசெய்யப் பட்ட காலகட்டத்தில் அழைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள அதேவேளை ஒக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 4,000 அழைப்புகள் வந்துள்ளன.

 இந்த முறைப்பாடுகளின் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின், குடும்ப ஆலோசனைச் சேவைகள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மறு வாழ்வு செயன்முறைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். 

பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டால் பொலிஸாரின் உதவியுடன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மானெல் ஜயமான்ன மேலும் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.