மரக்கறிகளின் விலைகள் இரண்டு மடங்காக அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மரக்கறிகளின் விலைகள் இரண்டு மடங்காக அதிகரிப்பு.

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. 

சந்தையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி 500 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் கரட் 320 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் பீட்ரூட், கோவா, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் என்பன 240 ரூபாவுக்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

 இதுதவிர கறிமிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

அத்துடன் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 170 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 25 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 4 இலட்சமாகக் குறைவடைந்துள்ளது.

 இதன் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.