மத்திய அதிவேக வீதியின் குருணாகல் வரையான பகுதி மாத இறுதிக்குள் திறக்கப்படும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மத்திய அதிவேக வீதியின் குருணாகல் வரையான பகுதி மாத இறுதிக்குள் திறக்கப்படும். மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி இம் மாத இறுதிக்குள் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வீதி ஒழுங்குகளை அடையாளப்படுத்துவது போன்ற சிறு வேலைகள் எஞ்சியுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S.V.S. வீரகோன் குறிப்பிட்டார். மழை காரணமாக அந்த நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடவத்தை – மீரிகம பகுதியின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.