பட்ஜெட்டுக்கு பின்னர் அமைச்சரவை மாற்றம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பட்ஜெட்டுக்கு பின்னர் அமைச்சரவை மாற்றம்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உடனடி அமைச்சரவையை மறுசீரமைப்புச் செய்வது குறித்து அரசின் உயர்மட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டார தகவல்கள் தெரிவித்தன.

 அதன்படி, புதிய முகங்களுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு உத்தேசித்துள்ள துடன், மேலும் சிலருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வழங்குவதற்கு கலந்தாலோசிக்கப்படுவதாகவும் அறிய முடிந்தது.

 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட் டம் 2021 நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டு 2021 நவம்பர் 22 ஆம் திகதி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. 

இதேவேளை, வரவு செலவுத் திட்டம் தொடர் பான செயற்குழு விவாதம் 2021 நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2021 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதுடன், வரவு செலவுத் திட்டம் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பை 2021 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்போதுள்ள அமைச்சரவையில் சில சில மாற்றங்கள் முன்னெடுப்பது குறித்து அரசின் உயர் மட்டத்தில் கலந்தாலோசிக்கப்படுவதாக அறிய முடிந்தது. (யோ.தர்மராஜ்) Tamilan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.