தீயில் சிக்கி எட்டு வயது சிறுமி பலி - வெலிகமவில் சம்பவம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

தீயில் சிக்கி எட்டு வயது சிறுமி பலி - வெலிகமவில் சம்பவம்

மாத்தறை, வெலிகம, வெவெகெதரவத்த பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 நேற்று (30) இரவு இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலி ஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த தீ விபத்தால் வீட்டின் மேற் கூரை எரிந்து சேதமாகியுள்ளது. வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் பாட்டியும், 13 வயது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் வெலிகம பொலிஸார் தீயை அணைக்க மாத்தறை தீயணைப்பு வாகனங்களை வரவழைத்துள்ளதாகவும் தீ விபத் துக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்


 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.