வரலாற்றில் இன்று நவம்பர் 29.2021.

 வரலாற்றில் இன்று நவம்பர் 29.2021.


நவம்பர் 29  கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்.

👉1394 – கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார்.

👉1549 – திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது.

 👉1612 – சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்) போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

👉1729 – நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.

👉1732 – தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.

👉1781 – அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர்.

👉1783 – அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் 5.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

👉1807 – நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.

👉1830 – போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.

👉1847 – வாசிங்டனில் மதப்பரப்புனர் மார்க்கசு விட்மன், அவரது மனைவி மற்றும் 15 பேர் அமெரிக்கப் பழங்குடிகளினால் கொல்லப்பட்டனர்.

👉1850 – புருசியா ஆத்திரியாவின் தலைமையில் செருமன் கூட்டமைப்பில் சேர சம்மதித்தது.

👉1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.

👉1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.

👉1890 – சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

👉1899 – பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.

👉1915 – கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன.

👉1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.

👉1929 – அமெரிக்கர் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா விடுவிக்கப்பட்டது.

👉1945 – யுகோசுலாவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

👉1947 – முதலாம் இந்தோ-சீனப் போர்: வியட்நாமில் மீ டிராக் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகளடங்கிய 300 பேரைப் படுகொலை செய்தன.

👉1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.

👉1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.

👉1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.

👉1963 – கனடிய விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.

👉1982 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.

👉1986 – சுரிநாம் இராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொதுமக்களைக் கொன்றது.

👉1987 – தென் கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 115 பேர் கொல்லப்பட்டனர்.

👉2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கித்தான் வெற்றிகரமாக நடத்தியது.

இன்றைய தின பிறப்புகள்.

👉1803 – கிறிஸ்டியன் டாப்ளர், ஆத்திரியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1853)

👉1835 – டோவாகர் சிக்சி, சீனப் பேரரசி (இ. 1908)

👉1901 – சோபா சிங், இந்திய ஓவியர் (இ. 1986)

👉1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

👉1913 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1988)

👉1913 – பெஞ்சமின் மர்க்கரியான், ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 1985)

👉1924 – பாறசாலை பி. பொன்னம்மாள், கேரளக் கர்நாடக இசைக்கலைஞர் (இ. 2021)

👉1932 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசுத்தலைவர் (இ. 2019)

👉1936 – ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)

👉1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1987)

👉1963 – லலித் மோடி, இந்தியத் தொழிலதிபர்

👉1977 – யூனுஸ் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்

👉1982 – ரம்யா, இந்திய நடிகை, அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்.

👉1530 – தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் (பி. 1470)

👉1694 – மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய உயிரியலாளர், மருத்துவர் (பி. 1628)

👉1872 – மேரி சோமர்வில்லி, இசுக்காட்டிய-இத்தாலிய வானியலாளர், கணிதவியலாளர்.

👉1924 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1858)

👉1989 – அ. மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)

👉1993 – ஜெ. ஆர். டி. டாட்டா, பிரான்சிய-இந்தியத் தொழிலதிபர் (பி. 1904)

👉2008 – ஜோர்ன் உட்சன், தென்மார்க்கு கட்டிடக்கலைஞர் (பி. 1918)

👉2010 – எஸ். சிவநாயகம், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1930)

👉2011 – இந்திரா கோஸ்வாமி, அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி. 1942)

👉2011 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1926)

👉2013 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைத் தமிழ்க் கல்வியாளர் (பி. 1921)

இன்றைய தின சிறப்பு நாள்.

👉பலத்தீன மக்களுடனான ஒற்றுமைக்கான பன்னாட்டு நாள்.

👉விடுதலை நாள் (அல்பேனியா)

👉குடியரசு நாள் (யுகோசுலாவியா)

👉ஒற்றுமை நாள் (வனுவாட்டு)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.