வரலாற்றில் இன்று நவம்பர் 08.11

 வரலாற்றில் இன்று நவம்பர் 08.11


நவம்பர் 8  கிரிகோரியன் ஆண்டின் 312 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1519 – எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார்.

 👉1520 – டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

👉1576 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர்.

👉1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார்.

👉1620 – பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் வெற்றி பெற்றன.

👉1644 – சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது.

👉1811 – இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், யாழ்ப்பாணத்தில் கீழ் நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளுக்கு சான்றாயர் விசாரணை முறையும் அமுலுக்கு வந்தது.

👉1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரித்தானியாவின் டிரெண்ட் என்ற அஞ்சல் கப்பலை வழிமறித்த அமெரிக்காவின் ‘சான் யெசிண்டோ கப்பல் இரண்டு கூட்டமைப்பு தூதர்களைக் கைது செய்தது.

👉1889 – மொன்ட்டானா அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

👉1892 – கறுப்பின, மற்றும் வெள்ளையின அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் முதல் தடவையாக ஒன்றிணைந்து நியூ ஓர்லென்சு மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.

👉1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்தார்.

👉1901 – ஏதென்சு நகரில் கத்தோலிக்க நற்செய்திகளின் கிரேக்க மொழிபெயர்ப்பு சர்ச்சையை அடுத்து கலவரம் ஏற்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

👉1917 – உருசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரை உள்ளடக்கிய மக்கள் பேரவை அமைக்கப்பட்டது.

👉1923 – மியூனிக் நகரில் இட்லர் தலைமையில் நாட்சிகள் செருமனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

👉1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பிராங்கோயிசப் படைகள் மத்ரித் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது, ஆனாலும் 3-ஆண்டு மத்ரித் முற்றுகை ஆரம்பமானது.

👉1939 – மியூனிக் நகரில் இட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

👉1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலி கிரேக்கத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: அல்ஜியர்சில் பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.

👉1950 – கொரியப் போர்: அமெரிக்க வான்படை வட கொரிய மிக்-15 விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியது.

👉1957 – அமெரிக்காவின் பான்-ஆம் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவுக்கும் ஒனலூலுவிற்கும் இடையில் 44 பேருடன் காணாமல் போனது. ஒரு கிழமையின் பின்னர் இதன் பாகங்களும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

👉1957 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது ஐதரசன் குண்டை பசிபிக் பிராந்தியத்தில் கிரிபட்டி தீவுகளில் வெற்றிகரமாகச் சோதித்தது.

👉1965 – சாகோஸ் தீவுக்கூட்டம், அல்டாப்ரா, பார்க்கார், டெ ரோச்சசு ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

👉1965 – பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

👉1977 – வெர்ஜினாவில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

👉1987 – வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

👉2002 – சதாம் உசேன் உடனடியாக ஆயுதக்களைவில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எச்சரிக்கை விடுத்தது.

👉2006 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் 19 பாலத்தீனர்களை அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றனர்.[2]

👉2006 – வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

👉2006 – பாக்கித்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

👉2011 – 2005 யூ55 என்ற சிறுகோள் பூமியை 324,600 கிமீ தூரத்தில் அணுகியது.

👉2013 – சூறாவளி ஹையான், பிலிப்பீன்சில் விசயன் தீவுகள் பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.

👉2016 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தார்.


 இன்றைய தின பிறப்புகள்.


👉1656 – எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1742)

👉1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)

👉1831 – லிட்டன் பிரபு, இந்தியாவின் 30வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1880)

👉1875 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (இ. 1907)

👉1893 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, ஆந்திர வயலின் இசைக் கலைஞர் (இ: 1964)

👉1902 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)

👉1903 – அல்பிரட் தம்பிஐயா, இலங்கைத் தொழிலதிபர், அரசியல்வாதி

👉1910 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழக தவில் கலைஞர் (இ. 1964)

👉1912 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர் (இ. 2005)

👉1908 – ராஜா ராவ், இந்திய எழுத்தாளர் (இ. 2006)

👉1920 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடன இயக்குநர் (இ. 2014)

👉1923 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)

👉1926 – டார்லீன் சி. ஆப்மேன், அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்

👉1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி

👉1937 – ராண்டார் கை, இந்தியத் தமிழ் திரைப்பட, சட்ட எழுத்தாளர்

👉1943 – ரிச்சர்ட் பென்சன், அமெரிக்க நிழற்படக்காரர், அச்சுத் தொழிலாளி, கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2017)

👉1954 – கசுவோ இசுகுரோ, சப்பானிய-பிரித்தானிய புதின எழுத்தாளர்

👉1957 – சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி

👉1966 – சீமான், தமிழக அரசியல்வாதி, திரைப்பட இயக்குனர், நடிகர்

👉1969 – உபேந்திரா லிமாயி, இந்தியத் திரைப்பட நடிகர்

👉1976 – பிறெட் லீ, ஆத்திரேலியத் துடுப்பாளர்

👉1981 – நியல் ஓ’பிறையன், அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர்

👉1986 – ஏரன் சுவோற்சு, அமெரிக்க கணினியியலாளர் (இ. 2013)


இன்றைய தின இறப்புகள்.


👉397 – மார்ட்டின், பிரான்சிய ஆயர், புனிதர்.

👉955 – இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)

👉1240 – இப்னு அரபி, அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165)

👉1605 – இராபர்ட்டு கேட்சுபி, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573)

👉1674 – ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1608)

👉1958 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1878)

👉1969 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (பி. 1875)

👉1970 – நெப்போலியன் ஹில், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1883)

👉1987 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர் (பி. 1913)

👉2000 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1912)

👉2006 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1942)

👉2009 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1916)

👉2013 – சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி. 1964)

👉2014 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)

👉2014 – ஐ. எஸ். முருகேசன், தமிழக மோர்சிங் இசைக் கலைஞர் (பி. 1930)

👉2015 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த துறவி, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1942)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉உலக நகர்ப்புறவியம் நாள்.

👉பன்னாட்டுக் கதிரியல் நாள்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.