அடைமழையால் மலையகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அடைமழையால் மலையகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில்.

இன்றும் மழை பெய்யும் சாத்தியம் தீவை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் இலங்கையை சுற்றி நிலை கொண்டிருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங் களில் இன்று (30) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

நேற்று பிற்பகல் 3 மணித்தியாலங்கள் பெய்த கடும் மழையினால் நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, ஹாலிஎல, எல்ல, பசறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. 

ஆபத்தான பகுதிகளிலுள்ள மக்களை இன்று இரவு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மத்திய மலையகத்தின் பல பிரதேசங்களிலும் பலத்த மழை பெய்து வருவதுடன் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது. 

குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் நாட்டை அண்மித்த கிழக்கு கரையோரத்தில் தற்போது நிலை கொண்டுள்ள தால், நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.