மன்னார் சென்ற ரிஷாட்டிற்கு அமோக வரவேற்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மன்னார் சென்ற ரிஷாட்டிற்கு அமோக வரவேற்பு.

மன்னார் மாவட்டத்திற்கு இன்று (30) மாலை விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றனர். 

கடந்த 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து வந்த நிலையில் இன்று (30) மாலை 4.30 மணியளவில் மன்னாரிற்கு விஜயம் செய்தார். 

மன்னார் தாராபுரம் பகுதியில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை கண்ணீர் மல்க வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து வருகை தந்த பல நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

 இதன்போது வயோதிபர்கள், தாய்மார்கள் அவரை வரவேற்று சுகம் விசாரித்ததோடு, அவரின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தனர். இதேவேளை, தான் சிறையில் இருந்த போது, தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.