புத்தளம் மாவட்டத்தில் கடும் மழை - வௌ்ளத்தில் மூழ்கிய பிரதேசங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

புத்தளம் மாவட்டத்தில் கடும் மழை - வௌ்ளத்தில் மூழ்கிய பிரதேசங்கள்.

புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

புத்தளம் மாவட்டத்தில் இருக்கும் 16 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள போதிலும், இதுவரை எவரும் இடம்பெயரவில்லை எனவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரியொருவர் கூறினார்.

 இதேவேளை, புத்தளம் நகர சபைக்குட்பட்ட பல கிராமங்களும் நேற்றும், இன்றும் பெய்த கடும் மழை காரணமாக மணல்குன்று, நூர்நகர், வெஸ்ட்டன் சோல்ட்டன், மதினா நகர், தில்லையடி உள்ளிட்ட சில பகுதிகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. 

வீடுகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் , வீதிகள் என்பன இவ்வாறு வெள்ளத்தினால் மூழ்கியுள்ள போதிலும், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியுடன் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

 அத்துடன், வெள்ளநீர் வழிந்தோடுவதற்காக புத்தளம் நகர் பகுதி மற்றும் தில்லையடி பகுதிகளில் பெக்கோ இயந்திரத்தின் மூலம் வீதியோர வடிகான்களை துப்பரவு செய்து, அகலமாக்கும் நடவடிக்கைகளும் புத்தளம் நகர பிதா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஆகியோரின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.