காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி.

காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற் றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப் பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆதம்பாவா முகமது அம்ஹர் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி இன்று அதிகாலை 5.30 மணிக்குப் பயணித்த கார் மீது, காத்தான் குடி பீச் வீதியிலிருந்து பிரதான வீதி சமிக்ஞை விளக்கு சந்தியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த சந்தியில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

 குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.