கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கத் திட்டம்?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கத் திட்டம்?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடை விதிக்க வாய்ப் புள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடை விதிக்க வாய்ப் புள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் பெரும்பான்மை யினரின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காகத் தடுப்பூசி செலுத்தாவர்கள் பொது இடங்களுக்கு நுழையத் தடை விதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் ஒரு தனிநபருக்கு தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உள்ளதைப் போன்று, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அவருக்கு உரிமை இல்லை.
ஐரோப்பா முழுவதும் பொது இடங்களில் இத்தகைய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையினரின் நலனுக்காக இவ்வாறான தீர்மானத்தை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் சுகாதாரத் துறையில் பணியாற்றும் முன்கள ஊழியர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித் துள்ளார்.
அரசாங்கத்திடம் 2 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசி உள்ளது என்றும் மேலும் 14.5 மில்லியன் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.