எல்லவல நீர்வீழ்ச்சிக்கு செல்ல தற்காலிகத் தடை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எல்லவல நீர்வீழ்ச்சிக்கு செல்ல தற்காலிகத் தடை.

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்ட எல்லவல நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபை தீர்மானித்துள்ளது குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுள் அதிகமானவர்கள், கடந்த காலங்களில் குறித்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தவுள்ள பாதுகாப்பு சுற்றுலா வேலைத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுத்து, இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வெல்லவாய பிரதேசத்தில் அனைவரையும் கவர்ந்த குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட பெருமளவான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகைத் தந்தாலும் அங்கு காணப்படும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக நேற்று (20) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அந்நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.