வீட்டு முன் நின்று கொண்டிருந்த 12 வயது சிறுமி, மின்னல் தாக்கி உயிரிழப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வீட்டு முன் நின்று கொண்டிருந்த 12 வயது சிறுமி, மின்னல் தாக்கி உயிரிழப்பு.

மின்னல் தாக்கி 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம், மஹவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது. 

சம்பவத்தில் பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை நிலவிய நிலையில், சிறுமி தனது வீட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

எரிகாயங்களுடன் நாகொல்லாகம வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொல்லாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.