மாரவிலவில் கடலில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்ற முயன்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மாரவிலவில் கடலில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்ற முயன்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மாரவில முதுகட்டுவ கடலில் மூழ்கி காணாமல் போன இளம் குடும்பஸ்தர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மாரவில பொலிஸார் தெரிவித்தனர். 

கொபேஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை 18 ஆம் திகதி பிங்கிரிய பகுதியிலிருந்து மாரவில பிரதேசத்துக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்த சிலர் மாரவில முதுகட்டுவ பிரதேசத்திலுள்ள கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வாறு கடலில் நீராடிக்கொண்டிருந்த போது சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி திடீரென காணாமல் போனதையடுத்து, சிறுவனின் பெற்றோர் கூக்குரலிட் டுள்ளனர். இதனையடுத்து, அங்கு நின்றவர்கள் கடலுக்குள் சென்று குறித்த சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 

எனினும், சில மணி நேரத்தின் பின் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், குறித்த சிறுவனை மீட்பதற்காகச் சென்றவர்களில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அந்தச் சந்தர்ப்பத்தில் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள், கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இணைந்து காணாமல் போன குறித்த இளம் குடும்பஸ்தரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்று (20) கரையொதுங்கி யுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.