மனித நுகர்வுக்கு உதவாத அரிசியுடன் கூடிய 100 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் கண்டுபிடிப்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மனித நுகர்வுக்கு உதவாத அரிசியுடன் கூடிய 100 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் கண்டுபிடிப்பு!

கொழும்புத் துறைமுகத்தில் மனித நுகர்வுக்கு உதவாத அரிசியுடன் கூடிய சுமார் 100 சரக்கு கொள்கலன்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

40 சரக்குக் கொள்கலன்கள் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள அரிசி இருப்பானது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றது என அரசாங்க ஆய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும் ஒன்பது சரக்குக் கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வத்தளையிலுள்ள ஒரு களஞ்சியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு அரிசி இருப்பில் இருந்த பூச்சிகள் அகற்றப்பட்டுள்ளன. 

பொருத்தமற்ற அரிசி இருப்பானது கடந்த 2019 இல் பாகிஸ்தானிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://t.me/itmchan

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.