October 05, 2021 at 02:31PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தடுப்பூசிக்கும் பாடசாலை திறப்பதற்கும் நேரடி தொடர்பு இல்லை.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் நேரடி தொடர்பு இல்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 

இதன்படி ,சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், பாடசாலைகளை மீண்டும் திறப்பது மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது இரண்டு வெவ்வேறு அம்சங்கள் என்று நிபுணர் குழு திட்டவட்டமாக சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது நாட்டில் நாளாந்தம் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை, பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தாமதமான தேர்வுகள் எதிர்காலத்தில் எவ்வாறு நடத்தப்படும் என்பதற்கான வாய்ப்புகள் போன்ற காரணிகளையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, ​​விஞ்ஞானத் தரவு மற்றும் நிபுணர் குழு முன்வைக்கும் பரிந்துரைகளின்படி தனித்தனியாக முடிவு செய்யப்படும் என்றும் அவர் சட்டிக்காட்டினார். 

மேலும் ,இவை இரண்டும் எதிர்காலத்தில் சரியான நேரத்தில் நடக்கும் என்று கூறிய அவர், ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டுமென்ற அவசியமில்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.