702 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

702 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கற்பிட்டி- குடாவ கடலோரப் பகுதியில் இருந்து 702 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

 வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த பகுதியில் நேற்று(02) சனிக்கிழமை மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த கடற்கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வாகனம் ஒன்றை கடற்படையினர் சோதனை செய்தனர். 

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம நிறையுடைய 20 மூடைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள், குறித்த கெப் வாகனத்திற்குள் காணப்பபட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

 இதனையடுத்து, கெப் வாகனத்தில் காணப்பட்ட 20 உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன், குறித்த கெப் வாகனத்தை கைப்பற்றிய கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்தனர்.

 இவ்வாறு குடாவ பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட, உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன்,, மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.