வரலாற்றில் இன்று அக்டோபர் 28.2021

 வரலாற்றில் இன்று அக்டோபர் 28.2021


அக்டோபர் 28  கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉97 – உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்.

👉306 – மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

👉312 – மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார்.

👉456 – போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

👉1420 – பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது.

👉1449 – முதலாம் கிறித்தியான் டென்மார்க்கின் அரசராக முடிசூடினார்.

👉1492 – கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார்.

👉1636 – மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் முதலாவது கல்லூரியை நிறுவுவதற்கான வாக்கெடுப்பை அடுத்து அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகம் என இன்று அழைக்கப்படும் கல்லூரி நிறுவப்பட்டது.

👉1707 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகிய இடங்களில் 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

👉1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாஸ்டனில் இருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் பிரித்தானியச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

👉1834 – மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

👉1886 – நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.

👉1891 – சப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000 இற்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர்.

👉1904 – பனாமாவும் உருகுவையும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.

👉1918 – முதலாம் உலகப் போர்: முன்னூறு ஆண்டுகள் ஆக்கிரமிப்பை அடுத்து, ஆத்திரியா-அங்கேரியில் இருந்து செக்கோசிலோவாக்கியா விடுதலையை அறிவித்தது.

👉1918 – புதிய போலந்து அரசு மேற்கு கலீசியாவில் உருவானதை அடுத்து, போலந்து-உக்ரைனியப் போர் ஆரம்பமானது.

👉1922 – பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் காலக்கெடுவை கிரேக்கம் ஏற்க மறுத்ததை அடுத்து, கிரேக்க-இத்தாலியப் போர் ஆரம்பமானது. இத்தாலி கிரேக்கத்தை அல்பேனியா ஊடாக ஊடுருவியது.

👉1942 – கனடா ஊடான அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

👉1949 – ஏர் பிரான்சு வானூர்தி போர்த்துகலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 48 பேரும் உயிரிழந்தனர்.

👉1956 – எல்விஸ் பிரெஸ்லி தேசியத் தொலைக்காட்சியில் போலியோ தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.

👉1958 – 23-ம் யோவான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.

👉1965 – இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் “கிறித்தவமல்லாத சமயங்களுடனான திருச்சபையின் தொடர்புகள் தொடர்பான அறிவிப்பை” திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார். இதன்படி, இயேசு கிறித்துவின் இறப்புக்கு யூதர்கள் காரணம் என்ற 760-ஆண்டுக்கால அறிவிப்பு மீளப்பெறப்பட்டது.

👉1990 – ஜோர்ஜியாவில் வரலாற்றில் முதற்தடவையாக பல-கட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

👉1995 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229 பேர் உயிரிழந்தனர், 265 பேர் காயமடைந்தனர்.

👉2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

👉2006 – 1930களில் சோவியத் போல்செவிக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிக்கிவீனா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.

👉2009 – பாக்கித்தான், பெசாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டனர்.

👉2014 – நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1466 – எராஸ்மஸ், டச்சு மெய்யியலாளர் (இ. 1536)

👉1845 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலந்து இயற்பியலாளர் (இ. 1888)

👉1867 – சகோதரி நிவேதிதை, அயர்லாந்து-இந்திய சமூக சேவையாளர், நூலாசிரியர் (இ. 1911)

👉1892 – மணிலால் காந்தி, மகாத்மா காந்தியின் 2வது மகன், சமூக செயற்பாட்டாளர் (இ. 1956)

👉1897 – எடித் எட், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (இ. 1981)

👉1914 – யோனாசு சால்க், அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (இ. 1995)

👉1933 – கரிஞ்சா, பிரேசில் கால்பந்து வீரர் (இ. 1983)

👉1955 – பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர்

👉1955 – இந்திரா நூயி, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர்👉1956 – மகுமூத் அகமதிநெச்சாத், ஈரானின் 6வது அரசுத்தலைவர்

👉1958 – அசோக் சவான், மகாராட்டிராவின் 16வது முதல்வர்

👉1967 – ஜூலியா ராபர்ட்ஸ், அமெரிக்க நடிகை

👉1978 – ஹரின் பெர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி

👉1979 – ஜவேத் கரீம், யூடியூப்பை அமைத்தவர்களில் ஒருவர்

👉1984 – பின் விட்டுரோக், அமெரிக்க நடிகர்

👉1988 – வாணி போஜன், தமிழ் நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉 1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)

👉1704 – ஜான் லாக், ஆங்கிலேய மெய்யியலாளர், மருத்துவர் (பி. 1632)

👉1900 – மாக்ஸ் முல்லர், செருமானிய மொழியியலாளர் (பி. 1823)

👉1978 – ருக்மணிதேவி, இலங்கை நடிகை, பாடகி (பி. 1923)

👉1981 – பி.ஸ்ரீ, தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1886)

👉1982 – இராபெர்ட் தெ’ஸ்கோர்ட் அட்கின்சன், பிரித்தானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1898)

👉1983 – போல் சுவிங்சு, பெல்ஜிய வானியற்பியலாளர் (பி. 1906)

👉1997 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், வீணை இசைக்கலைஞர் (பி. 1920)

👉2013 – ராஜேந்திர யாதவ், இந்திய எழுத்தாளர் (பி. 1929)

👉2014 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1937)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉செக்கோ-சிலோவாக் நாடு உருவான நாள் (1918 செக் குடியரசு, சிலவாக்கியா)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.