வரலாற்றில் இன்று அக்டோபர் 24.2021

 வரலாற்றில் இன்று அக்டோபர் 24.2021


அக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர்.

👉1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

👉1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.

👉1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

👉1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

👉1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

👉1851 – யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.

👉1857 – உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணி செபீல்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

👉1861 – ஐக்கிய அமெரிக்காவில் கண்டங்களுக்கிடையேயான முதலாவது தந்தித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

👉1871 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 20 வரையான சீனக் குடியேறிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

👉1902 – குவாத்தமாலாவின் சாண்டா மரியா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இது 20-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும்.

👉1911 – வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.

👉1912 – முதலாவது பால்கான் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில் செர்பியா வெற்றி பெற்றது.

👉1917 – முதலாம் உலகப் போர்: கப்பரெட்டோ சமரில் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளிடம் இத்தாலி பெரும் தோல்வியடைந்தது.

👉1917 – போல்செவிக் செம்படையினர் உருசியாவில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். அக்டோபர் புரட்சியின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.

👉1929 – கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.

👉1930 – பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் வாசிங்டன் லூயிசு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

👉1943 – நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: முசாசி என்ற சப்பானியப் போர்க்கப்பலை அமெரிக்க விமானங்கள் தாக்கி மூழ்கடித்தன.

👉1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

👉1946 – வி-2 இல. 13 என்ற ஏவூர்தியில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டது.

👉1949 – ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

👉1954 – டுவைட் டி. ஐசனாவர் தெற்கு வியட்நாமிற்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.

👉1960 – சோவியத் ஒன்றியத்தின் பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16 ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

👉1964 – வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.

👉1980 – போலந்து அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது.

👉1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.

👉1998 – டீப் ஸ்பேஸ் 1 என்ற வால்வெள்ளி/சிறுகோள் திட்டம் ஆரம்பமானது.

👉2003 – கான்கோர்டு விமானம் தனது கடைசி வணிக-நோக்குப் பயணத்தை மேற்கொண்டது.

👉2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் ‘சாங்-ஒன்று’ தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

👉2008 – இரத்த வெள்ளி அன்று உலகின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டன.


இன்றைய தின பிறப்புகள்.


👉1632 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (இ. 1723)

👉1775 – பகதூர் சா சஃபார், இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் (இ. 1862)

👉1804 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (இ. 1891)

👉1827 – ரிப்பன் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இந்திய வைசிராய் (இ. 1909)

👉1890 – சிசிர் குமார் மித்ரா, இந்திய இயற்பியலாளர் (இ. 1963)

👉1914 – இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இந்தியத் தேசிய இராணுவப் போராளி (இ. 2012)

👉1915 – பாப் கார்னே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1998)

👉1921 – ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (இ. 2015)

👉1921 – ஏ. கே. வேலன், தமிழக எழுத்தாளர்

👉1924 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1981)

👉1932 – இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2012)

👉1940 – கி. கஸ்தூரிரங்கன், இந்திய விண்வெளி அறிவியலாளர்

👉1954 – மால்கம் டேர்ன்புல், ஆத்திரேலியாவின் 29வது பிரதமர்

👉1957 – இ. ஜெயராஜ், இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்

👉1971 – மல்லிகா செராவத், இந்திய நடிகை

👉1980 – லைலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

👉1983 – தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்

👉1992 – துளசி தருமலிங்கம், இலங்கை-செருமனிய குத்துச்சண்டை வீரர்


இன்றைய தின இறப்புகள்.


👉1601 – டைக்கோ பிராகி, டென்மார்க் வானியலாளர் (பி. 1546)

👉1801 – மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்

👉1869 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1786)

👉1870 – அந்தோனி மரிய கிளாரட், எசுப்பானிய, கத்தோலிக்க மறைபோதகர் (பி. 1807)

👉1953 – மு. கதிரேசச் செட்டியார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1881)

👉1956 – எச். என். ரிட்லி, பிரித்தானியத் தாவரவியலாளர், மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர் (பி. 1885)

👉1981 – எடித் எட், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (பி. 1897)

👉1991 – இசுமத் சுகதாய், இந்திய எழுத்தாளர் (பி. 1915)

👉1994 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)

👉2005 – றோசா பாக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1913)

👉2006 – தரம்பால், இந்திய காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் (பி. 1922)

👉2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்கக் கணினி அறிவியலாளர், உணரறிவியலாளர் (பி. 1927)

👉2013 – மன்னா தே, இந்தியப் பாடகர் (பி. 1919)

👉2014 – தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்

👉2014 – எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1928)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉அந்தோனி மரிய கிளாரட் திருவிழா

உலக இளம்பிள்ளை வாத நாள்

👉விடுதலை நாள் (சாம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1964)

👉ஐக்கிய நாடுகள் நாள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.