வரலாற்றில் இன்று அக்டோபர் 17.2021

 வரலாற்றில் இன்று அக்டோபர் 17.2021


அக்டோபர் 17  கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது.

 👉1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.

 👉1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது.

👉1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

👉1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார்.

👉1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார்.

👉1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.

👉1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னன் டன்கிர்க் நகரை 40,000 பவுண்களுக்கு பிரான்சுக்கு விற்றார்.

👉1800 – இடச்சு குடியேற்ற நாடான குராசோ பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.

👉1806 – எயித்தியப் புரட்சியின் முன்னாள் தலைவர் பேரரசர் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.

👉1861 – ஆத்திரேலியா குயின்சுலாந்தில் பழங்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.

👉1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.

👉1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்காரியா, கிரேக்கம், செர்பியா ஆகியன மொண்டெனேகுரோவுடன் இணைந்து உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தன.

👉1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாட்சி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

👉1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் கிரேக்கத்தின் செரெசு என்ற கிராமத்தில் அனைத்து ஆண்களையும் படுகொலை செய்தனர்.

👉1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

👉1943 – சயாம் மரண இரயில்பாதை (பர்மா-தாய்லாந்து தொடருந்து சேவை) ஆரம்பிக்கப்பட்டது.

👉1956 – முதலாவது வணிகநோக்கு அணுக்கரு உலையை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி இங்கிலாந்து, செலாஃபீல்டு என்ற இடத்தில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

👉1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

👉1965 – நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.

👉1966 – நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.

👉1970 – மொண்ட்ரியால்: கியூபெக் மாநிலத்தின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான பியேர் லாப்போர்ட்டே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

👉1973 – எகிப்துக்கு எதிராக இசுரேல் நடத்திய போரில் இசுரேலுக்கு உதவிய மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஓப்பெக் அமைத்து எண்ணெய்த் தடையை அறிவித்தது.

👉1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

👉1989 – சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 6.9 Mw நிலநடுக்கம் தாக்கியதில் 63 பேர் உயிரிழந்தனர்.

👉1989 – அமைதிப் புரட்சி: கிழக்கு செருமனியின் அரசுத்தலைவர் எரிக் ஒனெக்கரை செருமன் சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்ற கட்சியின் உயர்பீடம் முடிவு செய்தது.

👉1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.

👉1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

👉2001 – இசுரேலின் சுற்றுலாத்துறை அமைச்சர் ர்டெகாவாம் சீவி தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

👉2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி என்ற பெயரைப் பெற்றது.

👉2006 – ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.

👉2018 – கனடாவில் பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டது.

👉2018 – கிரிமியாவில் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் 18-அகவை மாணவன் ஒருவன் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1817 – சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர் (இ. 1898)

👉1820 – ஏதவார்து உரோச்சே, பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1883)

👉1887 – எவுப்ராசியம்மா எலுவத்திங்கல், இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1952)

👉1892 – ஆர். கே. சண்முகம் செட்டியார், இந்தியப் பொருளாதார அறிஞர் (இ. 1953)

👉1906 – கே. பி. ஹரன், இந்திய-ஈழப் பத்திரிகையாளர் (இ. 1981)

👉1912 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (இ. 1978)

👉1913 – பூரணி, தமிழக எழுத்தாளர் (இ. 2013)

👉1915 – ஆர்தர் மில்லர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2005)

👉1919 – ஈசாக் கலாத்னிகோவ், உக்ரைனிய-உருசிய இயற்பியலாளர்

👉1931 – எஸ். சி. ஜமீர், இந்திய அரசியல்வாதி, மகாராட்டிரா ஆளுநர்

👉1940 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (இ. 2015)

👉1947 – பிருந்தா காரத், இந்தியப் பொதுவுடமை அரசியல்வாதி

👉1948 – ராபர்ட் ஜோர்டான், அமெரிக்க எழுத்தாளர், சிப்பாய் (இ. 2007)

👉1952 – ஜானு பருவா, இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்

👉1959 – அமீனா குரிப், மொரிசியசின் குடியரசுத் தலைவர், உயிரியற் பல்வகைமையாளர்

👉1965 – அரவிந்த டி சில்வா, இலங்கைத் துடுப்பாளர்

👉1970 – அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாளர்

👉1972 – எமினெம், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்

👉1983 – பெலிசிட்டி ஜோன்ஸ், ஆங்கிலேய நடிகை

👉1992 – பிரணிதா சுபாஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

👉1992 – கீர்த்தி சுரேஷ், தெனிந்தியத் திரைப்பட நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉 532 – இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

👉1690 – மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சிய புனிதர், அருட் சகோதரி (பி. 1647)

👉1849 – பிரடெரிக் சொப்பின், போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810)

👉1887 – குசுத்தாவ் கிர்க்காஃப், செருமானிய இயற்பியலாளர் (பி. 1824)

👉1920 – ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887)

👉1941 – ஜான் சுடேன்லி பிளாசுகெட், கனடிய வானியலாளர் (பி. 1865)

👉1981 – கண்ணதாசன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1927)

👉2013 – சரோஜினி வரதப்பன், தமிழக சமூக சேவகி, எழுத்தாளர் (பி. 1921)

👉2014 – மசாரு இமோடோ, சப்பானிய எழுத்தாளர் (பி. 1943)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉இஞ்ஞாசியார் விழா.

👉எண்ணிம சமூக நாள் (இந்தியா)

👉உலக வறுமை ஒழிப்பு நாள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.