உணவகங்களிற்கு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான அட்டையை காண்பிக்கவேண்டும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 உணவகங்களிற்கு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான அட்டையை காண்பிக்கவேண்டும்.

விரைவில் கொழும்பில் எதிர்காலத்தில் கொழும்பில் உணவகங்களிற்கு உணவருந்த செல்பவர்கள் தங்கள் தடுப்பூசி அட்டையை காண்பிக்கவேண்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கொழும்பில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் இது குறித்து ஆராய்ந்துவருகின்றனர் என கொழும்பு நகர உணவகங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஹார்ப்போ குணரட்ண தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை காண்பித்தால் உணவகங்களிற்கு வருபவர்களிற்கு நம்பிக்கை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 உணவகங்களின் நுழைவாயிலில் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி அட்டையை காண்பிக்கலாம் அல்லது அதன் படத்தை தொலைபேசியில் காண்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 இதேபோன்று உணவகங்களில் பணியாற்றுபவர்களும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை குறிக்கும் வகையில் பட்ஜ் அணிந்திருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.