ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் காரணமாக 120 பேர் பலியாகியுள்ளனர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் காரணமாக 120 பேர் பலியாகியுள்ளனர்.

பலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை ஈக்குவடோரில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான படுகொலை என வர்ணித்துள்ள அதிகாரிகள் ஐவர் தலைதுண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். 

சிறைச்சாலை போர்க்களமாக காணப்படுவதையும் பல உடல்கள் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 

கைதிகள் கத்திகள் துப்பாக்கிகள் குண்டுகளை பயன்படுத்தி மோதலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி பாஸ்டகோ புவானகோ சிறையின் கழிவுநீர் வெளியேறும் குழாய்களில் பல உடல்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 மருத்துவமனையின் பிரதே அறைக்கு வெளியே கண்ணீருடன் கைதிகளின் குடும்பத்தவர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தவர்கள் எவ்வாறு தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை விபரித்துள்ளனர்.

 மெக்சிக்கோவில் செயற்படும் பலம்பொருந்திய போதைப்பொருள் கும்பலே சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்காக 400 பொலிஸாரை பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.