புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட சென்ற உயிரியல் ஆய்வாளரை ஊரடங்கில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இல்லை என கைதுசெய்த பொலிஸார்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட சென்ற உயிரியல் ஆய்வாளரை ஊரடங்கில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இல்லை என கைதுசெய்த பொலிஸார்.

பம்பலப்பிட்டி கின்ரோஸ் பகுதியில் கடற்பரப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட சென்ற கடல் உயிரியல் ஆய்வாளர் கலாநிதி ஆசா டி வொசை முடக்கல் நிலையில் பயணம் செய்ததாக தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

அவர் இதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இன்றைய தினம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை பார்வையிடுவதற்காக நான் கின்ரோஸ் கடற்கரைக்கு சென்றேன் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

எனது தந்தை காரை செலுத்தினார் எனினும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவித்து என்னை கைதுசெய்தார்கள் என அவர் பதிவிட்டுள்ளார். 

தேசிய பூங்காவிற்கும் படகு சவாரிக்கும் செல்பவர்களிற்கும் வேலைக்கும் செல்பவர்களிற்கும் இங்கு ஒரே சட்டம் என எனக்கு தெரிவிப்பவர்களிற்காக நான் இதனை நான் பகிர்ந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார் நான் கடற்கரையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட சென்றேன் அது எனது பணி என அவர் தெரிவித்துள்ளார். 

நான் பொழுதுபோக்கிற்காக செல்லவில்லை,கடற்கரையில் ஏற்பட்ட பாதிப்பகளை மதிப்பிடவே சென்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.