குலாப்’ புயல் இன்று மாலை இந்திய கரையை கடக்கிறது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

குலாப்’ புயல் இன்று மாலை இந்திய கரையை கடக்கிறது 


குலாப் புயல் இந்தியாவின் ஒடிசா மாநிலம் கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக்கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருந்தது. அது மேலும் புயல் சின்னமாக வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

இந்த புயலுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக்கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் புயல் கரையைக்கடக்கும் போது 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குலாப் புயல் எதிரொலியாக துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், சென்னை, நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.