இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு...


உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மாத்திரமே பைசர் அல்லது மொடோர்னா தடுப்பூசி இராணுவத்தினால் செலுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். 

அதன்படி ,இந்த இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டுமாயின், உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமானது எனவும் அவர் கூறுகின்றார்.

 இதைவிடுத்து , உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பைசர் அல்லது மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படாது என அவர் குறிப்பிடுகின்றார்.

 அதற்கமைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாராஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, வைத்தியசாலை வளாகத்தில் பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் (25) ஒன்று திரண்டிருந்தனர்.

 எனினும், உள்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படாது என கூறிய நிலையில், இராணுவ வைத்தியசாலைக்கு முன்பாக மாணவர்கள் நேற்று அமைதியின்மையை தோற்றுவித்தனர்.

 இவ்வாறான நிலையிலேயே, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைக் கூறினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.