எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற இரு நாடுகளுடன் இலங்கை பேச்சு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற இரு நாடுகளுடன் இலங்கை பேச்சு. 


எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலும், எரிபொருளைக் கடனாகப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம் பித்துள்ளது. 

இதன்படி இந்திய அரசிடமிருந்து 500 மில்லியன் அமெ ரிக்க டொலர் கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித் துள்ளார் என்று ‘எகனமி நெக்ஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. 

நிலுவையில் உள்ள எரிபொருள் கொள்வனவுக்கான தொகையைச் செலுத்துவதற்கும் புதிதாக எரிபொருள் கொள்வனவு செய்வதற்குமே இந்தக் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டு முக்கிய உள்நாட்டு வங்கி களில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் களைக் கடனாகப் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட் டுள்ளார். 

ஊடகங்களில் கூறப்பட்டுள்ளதைப் போன்று ஈரானிட மிருந்து கடன் கோரப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், “கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அங்கீகரிக் கப்பட்ட நாடுகளுடன் நாங்கள் கடன்கள் தொடர்பான விடயங்களைக் கையாள்வோம்" என்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.