கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம் - அரச தாதிய அதிகாரிகளின் சங்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம் - அரச தாதிய அதிகாரிகளின் சங்கம்.

(எம்.ஆர்.எம்.வசீம்) கொவிட் தொற்று கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்வோம் என அரச தாதிய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். 

கொவிட் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சுகாதார பிரிவினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் அரசாங்கம் குறைப்பு செய்திருப்பது தொடர்பில் குறிப்படுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று கட்டுப்படுத்தவதற்காக உயிரை பணயம் வைத்து செயற்படுகின்ற சுகாதார துறையின் கொரோனா உதவி தொகையாக மாதாந்தம் 7ஆயிரத்தி 500ரூபா வழங்கி வந்தது. 

தற்போது அந்த தொகையை முற்றாக நீக்கி இருக்கின்றது. அதேபோன்று எமது ஊழியர்கள் ஆளணி பற்றாக்குறை காரணமாக மேலதிக நேரமாக மாதத்துக்கு 200 முதல் 250 மணித்தியாலங்கள் சேவை செய்கின்றனர். அதற்கான கொடுப்பனவையும் குறைத்திருக்கின்றது. 

அத்துடன் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருக்கின்றபோதும் அதனை செய்வதும் இல்லை. ஊழியர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு வசதிகளையும் இதுவரை வழங்காமல் இருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் கொவிட் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திடம் எதிர்பார்க்கப்படும் ஆதரவு கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கு செல்வோம். 

மேலும் நாட்டில் கொராே நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிககையில் குறைவு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. என்றாலும் அரசாங்கத்தின் தோல்வியடைந்த சுகாதார முகாமைத்துவம் காரணமாக எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு கொராே அலை ஒன்று ஏற்படும் அபாயம் இருக்கின்றது. 

அத்துடன் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் வீடுகளில் மரணிப்பவர்களின் வீதம் அதிகரித்திருக்கின்றது. 

இது நல்ல நிலைமையல்ல. அதனால் கொவிட் தொடர்பான பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு, நாட்டின் உண்மை நிலைமையை புரிந்துகொள்ளவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.