தேர்தல் முறையில் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பசில் மற்றும் ஹக்கீம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

தேர்தல் முறையில் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பசில் மற்றும் ஹக்கீம்.

தேர்தல் முறையில் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஸ மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் தேர்தல் மற்றும் தேர்தல் அமைப்பு விதிகளில் மாற்றங்கள் மற்றும் தேவையான திருத்தங்களைச் செய்ய இவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 

இக் குழுவிற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை வகிக்கிறார். இவர்களின் இணைவோடு உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிக்கும் என்று நாடாளுமன்ற உரையில் சபாநாயகர் தெரிவித்திருந்தார். 

இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல். பீரிஸ், பவித்ராதேவி வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, எம்.எம். அலி சப்ரி, ஜீவன் தொண்டமான், அனுரா திசாநாயக்க, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம். சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.