மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்ற இறக்குமதி கட்டுப்பாடுள்ள பொருட்களுடன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 30 பேர் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்ற இறக்குமதி கட்டுப்பாடுள்ள பொருட்களுடன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 30 பேர் கைது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றை நாட்டிற்கு கொண்டு வந்த 30 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியா சென்று நாடு திரும்பிய கொழும்பை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுநந்த சில்வா தெரிவித்தார். இதன்போது, சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களின் பெறுமதி 40 இலட்சத்திற்கும் அதிகம் என அவர் குறிப்பிட்டார். 

சந்தேகநபர்கள் 472 கிலோகிராம் மஞ்சள், 352 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் மருந்துப்பொருட்களை தமது பொதிகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக சுநந்த சில்வா மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.