பிரதமர் தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பிரதமர் தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் கூட்டமொன்று இன்று (23) நடைபெற உள்ளது. 

இக் கலந்துரையாடல் இன்று மாலை 4.30 மணி அளவில் அலரி மாளிகையில் நடைபெற உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

வத்தளை, கெரவலப்பிட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்படும் மின்நிலைய எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் சேமிப்பு வளாக நிர்மாணிப்பு வேலைத் திட்டமானது டெண்டர் ஒப்பந்தம் இல்லாமல் அமெரிக்க கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்படுவது தொடர்பாகவே இக்கலந்துரையாடலானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அண்மையில் ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியதுடன், குறித்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் விவாதிக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

 அதன்படி, குறித்த கலந்துரையாடல் இன்று மாலை அலரி மாளிகையில் பிரதமருடன் நடைபெற உள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.