2020ஆம் ஆண்டிற்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
2020ஆம் ஆண்டிற்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில்.

2020ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், குறித்த பரீட்சைக்கு 622,000 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடாமல் இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இந்நிலையில், செய்முறைப் பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து ஏனைய 8 பாடங்களு்ககான பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் சமீபத்தில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

மேலும் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான மாணவர்கள் தற்போது இணையவழி ஊடாக உயர்தர வகுப்புக்களின் பாடங்களை கற்று வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇
 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.