இளைய வயதினருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கே தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இளைய வயதினருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கே தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டதுடன் இளையோர் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நாடளாவிய ரீதியில் அழுலாக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை (21) நிறைவடையுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இளையோர் 15 – 19 வயதுகளுக்கிடையிலான தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2021 ஒக்டோபர் 1 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதென இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்தி சில்வா அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற கொவிட் - 19 தடுப்புச் செயலணியின் கலந்துரையாடலின் போது அத்தியவசிய சேவைகள், மோட்டார் வாகன மற்றும் காணிப்பதிவு திணைக்களம் என்பவற்றின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதோடு 15 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 மருந்தகங்கள், விவசாயம், ஆடை மற்றும் ஏற்றுமதி துறை, பொருளாதார மையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இடம்பெறும் என்பதுடன், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்து இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.