மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை, தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை, தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என, மதுவரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில், பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள், உண்மைக்கு புறம்பானவை. 

இன்று முதல், பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில், தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்த விடயம், உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அவ்வாறு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை. 

என மதுவரித் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, உண்மைக்குப் புறம்பான தகவல் கிடைத்த வேளை, நேற்று மாலை மதுபானசாலைகள் திறக்கப்பட்ட வேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபானசாலைகளில், மதுப்பிரியர்கள், மதுபான கொள்வனவில் ஈடுபட்டனர்.

 அதற்கமைய, மதுபானசாலைகளின் முன்னால், மதுப்பிரியர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுபானத்தை கொள்வனவு செய்ய முண்டியடித்ததை காணக்கூடியதாக இருந்தது. இதன் போது, சமூக இடைவெளி பேணப்படவில்லை என, விசனம் வெளியிட்டது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.