லொகான் ரத்வத்தையின் நடவடிக்கையால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஆபத்து - தேர்தல் ஆணைக்குழு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

லொகான் ரத்வத்தையின் நடவடிக்கையால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஆபத்து - தேர்தல் ஆணைக்குழு

உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானம் லொகான் ரத்வத்தை விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம்வேண்டுகோள் விடுக்கப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 பொதுமக்களின் பிரதிநிதிகள் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை அச்சுறுத்தினால் மக்கள் நாட்டின் தேர்தல் முறைமீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு இந்த விவகாரம் குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

 லொகான் ரத்வத்தை சிறைச்சாலைகளிற்குள் நுழைந்து நடந்துகொண்ட விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு நேற்று ஆராய்ந்துள்ளது.

 இவ்வாறான நடவடிக்கைகளால் சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் மீறப்படுவதுடன் மாத்திரமின்றி பொதுமக்கள் தேர்தல் முறை ஜனநாயகம் மீதான நம்பிக்கையை இழக்கும் ஆபத்துமுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக சபாநாயகரை உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.