மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் மதுப் பிரியர்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் மதுப் பிரியர்கள்.
கொரோனா மதுபான கொத்தணி உருவாகிறதா.? தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் நாட்டிலுள்ள மதுபான நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து மதுபானத்தைப் பெறும் ஆவலில் மதுப்பிரியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
கொரோனா மதுபான கொத்தணி உருவாகிறதா.? தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் நாட்டிலுள்ள மதுபான நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து மதுபானத்தைப் பெறும் ஆவலில் மதுப்பிரியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு மதுப்பிரியர்கள் மதுபானசாலைகளை நோக்கி படையெடுத்தனர்.
டெல்டா கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் மதுபானங்களை வாங்குவதற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட போதிலும் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டமையால் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்புள்ளதாக மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையானது மக்களிடத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மதுப்பிரியர்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் மதுபானங்களை வாங்க திரண்டிருந்தனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.