கொரோனா தடுப்பூசி அட்டை இன்றி வெளியில் செல்வது தடையா? – வெளியானது உண்மை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
கொரோனா தடுப்பூசி அட்டை இன்றி வெளியில் செல்வது தடையா? – வெளியானது உண்மை.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காதிருப்பதற்கோ அல்லது வீதிகளில் பயணிக்காதிருப்பதற்கோ எந்தவித நடைமுறைகளும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவில்லை என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின், அதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்களை கடந்த சில தினங்களாக வீதி கடவைகளை கடந்த செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஹேமந்த ஹேரத், சுகாதார அமைச்சினால் அவ்வாறான அறிவிப்புக்கள் பிறப்பிக்கப்படவில்லை என கூறினார். எனினும், நாட்டிலுள்ள வேறு ஏதேனும் சட்டங்களின் பிரகாரம், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால், அதற்கு தாம் பொறுப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.