இணைய கற்பித்தல் நடவடிக்கைகைளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் 119 அல்லது சி.ஐ.டி.க்கு அறிவிக்கவும்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இணைய கற்பித்தல் நடவடிக்கைகைளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் 119 அல்லது சி.ஐ.டி.க்கு அறிவிக்கவும்

இணைய கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் 119 அல்லது சி.ஐ.டி.க்கு அறிவிக்குமாறு தெரி விக்கப்பட்டுள்ளது. 

இணைய கற்பித்தல் நடவடிக்கையில் தற்போது முன்னெடுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என எவராவது மிரட்டினால், புகார் செய்யுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். 

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கோ , 119 என்ற இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த புகார்கள் தொடர்பான சட்டத்தை உடனடியாகவும் சரியான முறையில் அமுல்படுத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுப் பெற்ற) சரத் வீரசேகர குற்றப் புலனாய்வு திணைக் களத்திற்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். 

அரசாங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற் றும் மிரட்டுவது குற்றம் என்றும், இதுபோன்ற நபர்களுக்கு எதிராக விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.