நீர் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு கோரிக்கை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 நீர் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு கோரிக்கை

நீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

தொடர்ச்சியான நீர் விநியோகத்துக்கு சரியான நேரத்தில் நீர் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி திலின எஸ். விஜேதுங்க கூறினார். 

கொவிட் -19 தொற்றுநோயால் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், நிலவும் சூழ்நிலை காரணமாக நுகர்வோர் நீர் கட்டணத்தைச் செலுத்துவதில் தாமதம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பட்டியல் கட்டணத்தை எளிதாகச் செலுத்த பல புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்தப் பட்டியல்களை கைத்தொலைபேசி நிறுவனங்கள், இணையத்தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வங்கிச் சேவைகள் மூலமாகவும் செலுத்தலாம்.

 மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் நீர் வழங்கல் சபையின் அலுவலகங்களுக்குச் சென்று காசாக அல்லது காசோலை அல்லது அட்டை மூலம் செலுத்தலாம். மேலதிக விபரங்களுக்கு 011 2 623 623 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் விஜேதுங்க தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.